நான் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் பின்னர் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் சிங்ஹெல்த் நிறுவனத்திலும் தலைமைத்துவத் திறன்களில் பயிற்சி பெற்றேன். பள்ளி மாணவர்கள் முதல் பட்ட பின் படிப்பு மருத்துவர்கள் வரை தலைமைத்துவ பயிற்சி வழங்கிய அனுபவம் எனக்கு உண்டு.
தலைமைத்துவ பயிற்சி தொடர்பான அனைத்து சர்வதேச பயிற்சி நெறிகள் மற்றும் கற்கை வகுப்புகளை எடுத்து ஆராய்ந்தால் பின்வரும் முக்கியமான கூறுகளை காணமுடியும்.
1. தகவல் தொடர்பு திறன் (communication skills)
2. நேர மேலாண்மை (time management)
3. மன அழுத்த மேலாண்மை (stress management)
4....
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் தேதியும் சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எங்களின் சொர்க்கபூமியான தமிழீழத்திலும் ஆண்,பெண் செவிலியர்கள், எவ்வித ஊதியமுமின்றி மக்கள் பணியாற்றினார்கள்..
இனவாத அரசின் பல்வேறு தடைகளிற்குள்ளும் பட்டமெடுத்த தாதியர்போல் பட்டறிவுத்தாதியர்கள் தேவதைகளாகி பல்லுயிர்களைக் காத்தார்கள்...
களமருத்துவம் உட்பட சகல துறைகளிலும் பட்டறிவுடன் திறம்பட செயற்பட்ட எம் ஈழத்தின் தாதியர்களை மனதிருத்தி நன்றிகளுடன் நினைந்து நிற்கிறோம் இந்நாளில்..
"பட்டமுமில்லை பதவியுமில்லை பட்டறிவுப் புலிகள் மக்கள் துயர் தீர்க்கும்...
கண்ணீரிலும் செந்நீரிலும்
கரைந்த காலங்கள் - பல
கடுகதியாய்க் கடந்தாலும்...
கஜவாகு மைந்தர்களின் தீராத
கயமை கண்டு துவண்டு
கண்டங்கள் - பல
கடந்து வாழ்ந்தாலும்...
காலதேவன் எனை அழைக்கும் காலம் கண்ணேதிரே தெரிந்தாலும்...
கடந்திட முடியாத
கனதியான வலி! 🥲
நேர்மை அற்ற நோர்வே தலைமையில் சமாதான நாடகம் மாங்கனித்தீவில் ஆடப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் தமிழீழ வானொலியின் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்) அவர்கள் ஒருவரை கிளிநொச்சி பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
பக்குவமாகவும் மரியாதையுடனும் அழைத்துவரப்பட்ட அந்த மனிதர் சாதாரணமாக சாரத்துடன் எனது அறைக்குள் சிறிது நொண்டிக் கொண்டே வந்தார்.
சாரத்தை மெல்ல உயர்த்திக் காட்டிய போது முழங்காலில் உரசல் காயம் ஏற்பட்டிருந்தது.
"என்ன நடந்தது?" எனக் கேட்டேன்!
எம்மவர்களுடன் சுண்டிக்குளம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு முதல் செம்பியன்பற்று, குடாரப்பு வரை...
01) அச்சுவேலியூர் சின்னமணி
ஐயாவின் வில்லுப்பாட்டு!
02) அளவெட்டியூர் சின்னமேளம்!!
03) ஈழநல்லூர் அருணா
இசைக்குழுவின் கானமழை!!!
03) ஏழாலையூர் ஆத்மஜோதி
முத்தையாவின் ஆன்மீகச்
சொற்பொழிவு!!!
04) கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி எனும் இரட்டையின் நாதஷ்வர இசை!
எனப் பற்பல நினைவுத் திறவுகோல்கள் எந்தன் நினைவுப் பெட்டகத்தின் சாரளங்களை சட்டென அடித்தே
அகலத் திறக்கின்றன!
ஆடலும்பாடலும்எங்கள்முந்தையரின்வழிபாட்டுமுறைகள்ஆகும்.
ஆடலசனாகிய சிவனின் ஆடலும்
வேங்குழல் எடுத்து ஊதும் கண்ணனின் கானமும் அதனையே எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
ஆதலினால்தான் வயவையூரின்வடிவு மிக்க வழக்கத்திலும் ஆடலும் பாடலும் இடம்
பெற்றிருக்கின்றன.
அஃதே,
ஆடல் பாடலுக்கு முத்தாய்ப்பாக ஆன்மீகச்
சொற்பொழிவுகளையும் செவிகள்
குளிரக் கேட்பது பெருவயவர்களின் ஞானச்செருக்கிற்கு வளம் சேர்த்தன.
ஆம்,
ஆன்மீகச்...
மண்ணக வாழ்வுதனை முடித்து
விண்ணக வாழ்வுக்கு சென்றாலும்,
நெஞ்சக பரப்பெங்கும்,
சிரஞ் சீவியாக நீவிர்தான் வாழ்கிறீர்கள்!
தூய ஆவியாக நீவிர்தான் வாழ்கிறீர்கள்!
எங்கள் மாவீரர்களே!...
எங்களைத் தூய்மைப் படுத்தியத்தியபடியே உங்கள் தூய ஆவி எங்களுடன் இருக்கிறது!
நயவஞ்சகரின் வலையில் நாம் வீழ்ந்து போகாமல் பார்த்தபடி உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது.
சாதிப் பேய்கள் எமை அண்டாமல் உங்கள் தூய ஆவி எங்களைப் பாதுகாக்கிறது.
மதங்கள் மதம் கொள்ளாமல் உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது.
பிரதேசவாதப் பிசாசுகள் எங்களிடையியே
சன்னதம் கொள்ளாமல்
உன்னதமான உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது.
வல்லமையுடன் சாணக்கியமும் தந்தருளும் தமிழர்களின் தூய...
.
தாயாகி இறைவன்
பூமி வந்தான் என்பார்கள்
தாய்க்கே தாயாகி
இறைவனுக்கும் நீ மேலானவனே..!
தூரமாகித் தாயருகில் இல்லாத காலங்களிலும்
அரூபனாய் தாயவளை தாங்கிய தனயனே..!
இதயத்தின் துடிப்பாக அன்னையைக் கொண்டவனே..!
அன்னைக்கு ஒன்றென்றால்
கனவில் கண்டு சொல்வாயே..!
தாயைக் காக்க நீ கவசமாய் ஆனாயோ..!
தந்தையை மந்திரமாய் சிந்தையில் கொண்டவனே..
உந்தையே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு
விண்ணென உயரமாய் உயர்ந்து நின்றவனே..
தந்தை தன் நாட்குறிப்பை
உன் கையில் தந்தாரே..
அத்தனையும் உள்ளெடுத்து
உயிராக வாழ்ந்தாயே..
தந்தை தனிய என்றா
தரணி விட்டு சென்றாயோ..
அண்ணைக்கு ஒன்றென்றால்
உன்னைக் கொடுப்பாய் என்பாயே..
அடிவாழை அவனென்று
அண்ணன் மகனைச் சொல்வாயே..
பெறாமக்கள் ஆனாலும்
என் மக்கள் போலென்பாயே..
பொன் மகள்கள் எந்நாளும்
நலம் வாழ நினைப்பாயே..
மனம் வாட வைத்து நீயும்
மறையாகிப் போனதேனோ..?
அக்காமார்...
அமரர் நண்பன் மேந்தனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
தர்மேந்திரா எனும் தனையனே நீ ஓர் தவப்புதல்வனென நாம் சிரம்தாழ்த்தி கரம்கூப்பி உனைவழியனுப்புமுன் சிலவரிகள் உன்பணிபற்றியதாய்....
மனிதருள் மாணிக்கம் என்றால் போல்
நீ மண்ணையும் மக்களையும் நேசிக்கமறக்கவில்லை .
பிறந்த அந்த ஊர்ப்பெயரைப்பேணவும் மறக்கவில்லை .
கற்ற அந்தக்
கல்லூரி மேம்பாட்டைப்பேணவும் பின்னிற்கவில்லை
இதற்கமைய ஓர் பழையமாணவர் பட்டறையை உன்வாழ்விடத்தில் நிர்மாணித்து நிலைபெறச்செய்த செம்மலாய் இன்று நீ எமைஎல்லாம் விட்டு விண்ணுலகம் சென்றாலும் மண்ணுலகம் உள்ளவரை மறுப்பதற்கோ மறப்பதற்கோ யாரும் இல்லை .
அப்பட்டறையின் விழுதாக நீ நின்று ஆற்றி நின்ற சேவையெல்லாம் இனிக் கிட்டாதோ...
எந்தன் அருமை நண்பன்
மேந்தன் எனை "எழுது எழுது " எனச் சொன்னான்!
எம்மோடு பாடசாலையில் படித்துவிட்டுப் பின்னர் சன்னங்கள் நடுவே சன்னதம் கொண்டாடி விழி மூடித்தூங்கும் உன்னதங்களைப் பற்றியே எழுதச் சொன்னான்!
குப்பிளான் பார்த்தீபன், வயவையூர்
நிமலன்,பலாலி பிரபா, அச்செழு
கோபாலக்கிருஷ்ணன் என அந்தப் பட்டியல் நீண்டது!....
நன் மாந்தனான மேந்தன் "வயவன்இணையம்" தனை நிறுவி அதனூடக எனை ஆற்றுப்படுத்தினான்!
அஃதே,
இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மாபெரும் மானுடப் பேரவலமாகிய முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து வந்த எந்தன் வலியைப் போக்கிட முயன்றான்!
ஆனால்,
இன்று மேந்தனின் இழப்பின் வலியை ஆற்றுப்படுத்த முடியாமல் தோற்றுப்போகின்றேன்!
-வயவையூர் அறத்தலைவன்-