யாதுமாகி நின்றீர் மாவீரரே!

மண்ணக வாழ்வுதனை முடித்து
விண்ணக வாழ்வுக்கு சென்றாலும்,
நெஞ்சக பரப்பெங்கும்,

சிரஞ் சீவியாக நீவிர்தான் வாழ்கிறீர்கள்!

தூய ஆவியாக நீவிர்தான் வாழ்கிறீர்கள்!

எங்கள் மாவீரர்களே!…

எங்களைத் தூய்மைப் படுத்தியத்தியபடியே உங்கள் தூய ஆவி எங்களுடன் இருக்கிறது!

நயவஞ்சகரின் வலையில் நாம் வீழ்ந்து போகாமல் பார்த்தபடி உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது.

சாதிப் பேய்கள் எமை அண்டாமல் உங்கள் தூய ஆவி எங்களைப் பாதுகாக்கிறது.

மதங்கள் மதம் கொள்ளாமல் உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது.

பிரதேசவாதப் பிசாசுகள் எங்களிடையியே
சன்னதம் கொள்ளாமல்
உன்னதமான உங்கள் தூய ஆவி எங்களை பாதுகாக்கிறது.

வல்லமையுடன் சாணக்கியமும் தந்தருளும் தமிழர்களின் தூய ஆவிகளே ஒற்றுமையும்
தாருங்கள்!

தூய ஆவிகளாக வலம் வரும் மாவீரார்களே காலமுள்ள காலம் வரை எம்முடன் இருங்கள்!

கல்லறையில் உறையும் தெய்வங்களே
ஒற்றுமையும்
தாருங்கள்!

-வயவையூர் அறத்தலைவன்-