31.9 C
Jaffna
Monday, May 6, 2024
எங்கள் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ காவியமாகிய பின்னர் யான் எழுதிய கவிதையின் தலைப்பு இது. ஏகலைவன் குருதட்சணைக்காய் கட்டைவிரலைக் கொடுத்தவன். எங்கள் ஏகலைவன் வருங்கால சந்ததிக்காய் கட்டைவிரலை களத்திடை கொடுத்தவன். கட்டைவிரலை கொடுத்துவிட்டு கனகாலம் களப்பணி செய்தவன். அந்த ஏகலைவன் வில்வித்தையில் மட்டுமே வித்தகன். இந்த ஏகலை சொல்வித்தையிலும் வித்தகன். கவிதை, கட்டுரை வரைவது தொடக்கம் பாடலாசிரியர், நடிகர் என பல்கலை வித்தகன். களப்பணிகளில் கடின பணியாகி வேவு நடவடிக்கையிலும் பின்னர் சேகரித்த தகவலை வைத்து வரைபடம் வரைவதிலும் வித்தகனாய் விளங்கினான். எனும் தொனிப்பொருளில் யான் யாத்திருந்த கவிதை தொலைந்துவிட்டது. இந்தப் பதிவைப் பார்த்த போது சில...
"கங்குல்"மெல்லக் கவிய கள்ளுக்கடை தேடி நடுத்தர வயதுடையோர் அலை மோதிட,...மோதிட... "கங்குல்"மெல்லக் கவிய "தேங்கனி நீர்" சுவையுடன் "மாங்கனி"ச் சுவையும் நாடி இளைஞர் ஊருக்குள் உலாவிட,...உலாவிட "கங்குல்"மெல்லக் கவிய பூங்கனிச் சோலைகளில் சிலர் காதல் மொழி பேசி மகிழ்ந்திட,...மகிழ்ந்திட   "கங்குல்"மெல்லக் கவிய கை கால் கழுவி கடவுளை வணங்கி ஒரு கூட்டம் பொத்தகங்களை புரட்டிடப் புரட்டிட! "கங்குல்"மெல்ல கவியக் கவிய முகமெல்லாம் பச்சை கலந்த கரி நிறத்துடன் தமை உருமறைத்து உருமறைத்து!... நாளை நமக்காய் விடியுமென நம்பிக்கையுடன் கரிகாலன் கண்மணிகளும் ஆயத்தமாகிய காதைகள் சொற்களுக்குள் அடங்காது அடங்கிடாது! ஆம், எம் செம்மண்ணில் முள்ளாய் இருந்த எதிரிப் படைவீடுகளை உளவு பார்க்க புறப்படுவர் உறங்காத கண்மணிகளாகிய...
வைத்திய கலாநிதி பத்மலோசினியை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியராக கடமையாற்றிய காலத்தில் இருந்தே அறிமுகமானோம். டொக்ரர் பத்மலோசினி அவர்களின் ஆளுமையும்,துணிச்சலும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பாங்கினையும் வேறு எவரிடமும் இல்லை என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன். வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி ஆயுததாரிகளாக நுழைந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த நோயாளிகளை மிலேச்சத்தனமாகத் தாக்கியதைத் தொடர்ந்து அப்போதைய பிரஜைகள் குழுவினராகிய நாங்கள் யாக்கருவில் இருந்த பிரிகேடியர் சமேராமைச் சந்தித்து நிலைமையை விளக்கினோம். அந்த பிரிகேடியர் உடனடியாகவே வைத்தியசாலைக்கு வருகை தந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்ட கப்டன் மேனனை உடனடியாக...
ஏழலையில் அவதாரம் எடுத்து குமுறும் எரிமலையாய் எதிரி முன் எழுந்து நின்றவர் வரலாறு பென்னம் பெரியது. சொற்களுக்குள் சிக்காத பெருவீரனின் காதைதனை முழுமையாகச்செப்பிடவொண்ணாததால் இடையிலிருந்தே ஆரம்பிக்கின்றேன். ஆம், கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முன்னர் சில காலம் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த கீர்த்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஓய்வு நிலையில் இருக்கவேண்டியவர் ஓயவில்லை. வைத்தியசாலையில் இருந்த வண்ணமே நிர்வாக வேலைகளையும் கவனித்தவாறே இருந்தார். தமிழீழ படைத்துறையின் தொழில்நுட்ப, எந்திரவியல் வளர்ச்சிக்காக அதியுயர் மதியுகம் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்த அவரது பணிதனை ஆற்ற யாரும் இல்லை என்பது அவருக்கு தெரியும். கொடிய...
அழகான இந்த ஒளிப்படம் எனைத் தொண்ணூறுகளின் மதியத்திற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. எங்கள் தங்கத் தாய்நிலத்தில் அங்கமாகிய ஒவ்வொரு ஊருக்கும் அல்லது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் நனிசிறந்த தனிச்சிறப்புக்கள் உண்டு. அந்த வகையில் இவை வடமராட்சி மண்ணின் சிறப்பு உணவு வகைகள் ஆகும். பருத்தித்துறையின் ஓடைக்கரைத் தோசை போல பருத்தித்துறை வடையும் தனித்துவச் சுவை கொண்டது. நடுவே இருக்கும் "புளுக்கொடியல்"ஐ விட ஏனைய அனைத்து பலகாரங்களும் வடமராட்சியில் இருந்து மணலாற்றுக்கு ஒரு குறித்த கால இடைவெளியில் மக்களால் அன்போடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஆங்கு ஒரு தங்ககத்தில் வைத்துச் சின்னஞ் சிறிய...
மாரியம்மனையும் மருதமடு மாதாவையும்... தமிழர்கள் ஒரு போதும் வேறுபடுத்தியது கிடையாது! ஏசுநாதரையும் ஏழுமலையானையும்.. தமிழர்கள் ஒரு போதும் வேறுபடுத்தியது கிடையாது! செபமாலையும் பூனூலையும் கடிந்து பாசறை புகுந்து..., நஞ்சுமாலை அணிந்து களமாடி களமாடிக் காவியமான... எங்கள் காணரும் வீரர்கள் காலத்து ஒற்றுமையின்சூத்திரமே மதங்களைக் கடந்து மானுடத்தை நே(யா)சிப்பதுதானே! ✊✊✊
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும். "உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை," என்கிறார் நியூயார்க் நகரைச் சேர்ந்த சமையல் கலைஞர் மேக்ஸ் லா மன்னா. "மோர் பிளான்ஸ், லெஸ் வேஸ்ட்" என்ற நூலின் ஆசிரியரான இவர், உணவு வீணாவதை குறைக்க தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராலும் பங்காற்ற முடியும் என்கிறார். "எனது வாழ்க்கைக்கு உணவு முக்கியமானதாக உள்ளது. தந்தைக்கு சமையல்காரர் இருந்ததால், அதிக உணவு...
உருமறைப்பு (camouflage) என்பதும் உயிர்களிடமிருந்து மாந்தர் யாம் கற்றுக் கொண்ட புதுக்கலை! ஒளிவு மறைவின்றிப் பார்க்கவும் பேசவும் தெரிந்த இந்தச் சின்னஞ் சிறுவர்களின் ஒளிகொண்ட இப்படத்தைப் பார்த்ததும்,.. எங்கள் அம்மா கோழிக்கு 'அடைவைப்பதும்' குஞ்சு பொரித்து வெளியே வந்து கீச்சு கீச்செனக் கீச்சுடுவதும் பொரிக்காத கூழ் முட்டைகளை மிதக்கவிட்டுப் பரிசோதிப்பதும் எந்தன் நினைவில் மலர்ந்து பல கதைகளைச் சொல்கின்றது. சிறுகால் கொண்ட மஞ்சள் நிற பஞ்சாய் தெரியும் குஞ்சுகளின் கீதம் எமை மகிழ்விக்கும். ஆம், வானத்தில் சத்தமின்றி வட்டமிடும் வல்லூறுகள், பாவ புண்ணியம் பார்க்காத பருந்துகள் போன்ற பறவைகளிடமிருந்து...
காண்டீபம் தூக்கும் எங்கள் கரங்களில் கன்னங்கரிய கைக்கடிகாரங்களே அன்று கட்டப்பட்டு இருந்தன. அடர்ந்த அடவியில்(காடு) ஒரு மணி நேரமோ இல்லை இரு மணி நேரமோ எமது காவல் கடமையை முடித்துவிட்டு அடுத்தவரை எழுப்புவதற்கு கடிகாரம் கட்டாயம் தேவைப்பட்டது. அக்காலத்தில் வெளிவந்த சில பழைய கடிகாரங்களின் உள்ளே சின்னஞ் சிறிய மின்குமிழ் (light 💡) இருக்காது. கைக்கடிகாரத்தில் நேரத்தினைப் பார்ப்பதற்கு #மின்சூழ் (Torch light )அடித்துப் பார்க்கவும் முடியாது. ஆம், இரவில் காட்டில் வெளிச்சம் காட்டுவது தற்கொலைக்கு சமனானது. ஆகவே எந்த விதமான பெரிய வெளிச்சத்தையும் கடிகாரத்தை நோக்கிப் பாய்ச்சி நேரத்தைப் பார்க்க...
வயவையூரில் அவதரித்த பிரபல வழக்கறிஞர் வல்லிபுரம் இராசநாயகம் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கடலில் வீசியெறிந்தார்கள் கடைந்தெடுத்த காடையர்கள் அன்று. ஐம்பதுகளின் பிற்காலத்தில் கொழும்பு காலிமுகத்திடலில் தமிழ் பேசும் மக்களுக்காய் அறவழியில் (சத்தியாக்கிரகம்) போராடினார் என்பதற்காய் அவருக்கு சிங்களம் அந்தத் தண்டனையைக் கொடுத்தது. அந்த அறவழிப் போராட்டத்தில் வேறு சிலரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்றாலும் இந்தக் கதையை சின்னண்ணாவுக்கும் அடியேனுக்கும் சொல்லும் போது அம்மா அழுதார். எங்கள் அம்மாவின் அழுகைக்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று அறவழிப் போராளியான அமரர் இராசநாயகம் நடக்கமுடியாமல் சக்கர நாற்காலியிலே அந்தப்...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS