நஞ்சுமாலை நாயகர்கள் போதித்த வேதம்தனை உள்வாங்கிய நல்லூர்!

மாரியம்மனையும்
மருதமடு மாதாவையும்…

தமிழர்கள் ஒரு போதும்
வேறுபடுத்தியது கிடையாது!

ஏசுநாதரையும்
ஏழுமலையானையும்..

தமிழர்கள் ஒரு போதும்
வேறுபடுத்தியது கிடையாது!

செபமாலையும் பூனூலையும்
கடிந்து பாசறை புகுந்து…,

நஞ்சுமாலை அணிந்து
களமாடி களமாடிக் காவியமான…

எங்கள் காணரும் வீரர்கள் காலத்து
ஒற்றுமையின்சூத்திரமே

மதங்களைக் கடந்து
மானுடத்தை நே(யா)சிப்பதுதானே!
✊✊✊