28.6 C
Jaffna
Sunday, May 19, 2024
ஒரு நத்தார் நாளில் மல்லாவி தேவாலயத்திற்கு மருத்துவர் அமுதன் அவனையும் அழைத்துச் சென்றார். அருட் தந்தை கருணாரத்தினம் (Rev. Father Mariampillai Xavier Karunaratnam) அடிகளார் தலைமையில் இரவுப் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆம், கிளி ஃபாதர் என தமிழர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் எங்கள் தேசத்து அருட் தந்தையால் ஆங்கு தூய தமிழில் பூசைகள் நடைபெற நடை பெற அவன் அனலிடை அகப்பட்ட மெழுகாய் உருகத் தொடங்கினான்! பாமரருக்கும் படித்தவர்களுக்கும் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அந்தப் பூசை ஓசை நயம் பெற்று இலங்கியது! வழக்கொழிந்து போன வடமொழியாகிய சமஷ்கிருத...
"தாயாகிய தனித்துவம்" எனும் கனதியான இந்த நன்நூலின் எமது தமிழ்பேசும் சமூகத்திற்கு இன்னுமோர் வரப்பிரசாதம் ஆகும். நூலின் ஆசிரியர் வைத்தியப் பெருந்தகை யாழ் தென்மராட்சி மண்ணில் அவதாரம் எடுத்து அறப்பணி ஆற்றும் நல்ல மானுடன் ஆவார்! எம் செம்மண்ணில் சமாதானக் கூத்து அண்ணாவியர் எரிக் சொல்ஹெய்ம் அவர்களால் அரங்கேற்றப்பட்ட கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தின் மருத்துவபீடத்திலும் அதற்கு வெளியேயும் பின்னர் யாழ் போதான வைத்தியசாலையிலும் எங்கள் விரிவுரையாளராக பல பெறுமதி மிக்க போதனைகளைச் செய்தவர்! இன்று முதுநிலை விரிவுரையாளராக உயர்ந்து நிற்கும் இந்தப் பெருந்தகை எமக்குப் போதித்த நல்லறிவானது இனமத பேதம் ஏதும் இன்றி...
தனது இரண்டு தனயன்களைத் தமிழினத்தின் விடுதலைக்காய் ஈந்த புதிய புற நானூற்றுத் தந்தை இவர் ஆவார்! வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் ஆற்றிய கருமங்கள் காரணமாக இந்த உத்தமரும் உலகத் தமிழினத்தால் போற்றப்படுகின்றார்! தமிழினத்தின் ஒப்பற்ற மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களுக்கு இந்தத் தந்தை தொட்டிலில் சூட்டிய பெயர் "பகீரதகுமார்" என்பதாகும். ஆம், அந்தக் காலத்துப் பகீரதன் போல எங்கள் காலத்துப் பகீரதன் ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வரவில்லையானாலும் தமிழினத்திற்குப் பற்பல வெற்றிகளை அடுத்தடுத்துப் பெற்றுத் தந்தார். மண்கிண்டிமலை முதல் மருதங்கேணி வரை நீண்டு நிமிர்ந்த பல சாதனைச்...
நேயம் பொங்கிட நேர் குமரேசனும் தேயம் போற்றிடக் கல்வியைத் தேடிப்பின் தாயின் மானங் காத்திடுந் தனையனாய் பாயும் வேங்கைகள் புக்கனன். நல்ல கல்வியை நாடியே இந்துவில் வல்லனாகக் கற்றபின் வாய்ந்த போர் எல்லை மீட்கவென்றே மணலாறு புக் கொல்லை நீசரை ஒட்டி விரட்டினான். வீரம் மிக்க விறல் மணலாற்றுமர் தீரம் காட்டிய சீர் குமரேசனும் போரில் இன்னுயிர் நீத்துப் புகழுடல் சேரவே நின்றவன் சிந்தை மறக்குமோ. பாழியற்றிடும் பாதகர் மாண்டிட வாழியெங்கள் மாவீரர் வலிமைசேர் ஆழி போற்றமிழ் அன்னையும் வாழியே வாழிய வாழிய பல்லாண்டு வாழியவே.
பைபிளும்(Bible) ரைபிளும்(Rifle) உச்சரிப்பு முறையில் கிட்டத்தட்ட ஒத்தொலிக்கும் தன்மையது கொண்டவை! அஃதே, ஏறத்தாழ ஒரே கால கட்டத்தில் அதாவது 15ஆம்,16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கும் அதிகம் அறிமுகமாயின! இரு வெவ்வேறு வகையான முகங்கள் கொண்ட பொருட்கள் அறிமுகமாகிய போதிலும் "அறம்"தனை அன்றாடம் போற்றியே வாழும் இனத்தினர் Bible ஐ இலகுவில் உள்வாங்கி அரவணைத்துக் கொண்டனர்! Bible ஐ எனும் நூலினை "விவிலியம்"எனவும் "பரிசுத்த வேதாகமம்" எனவும் தமிழாக்கமும் செய்தனர்! பழந்தமிழர் எழுதி வைத்த எத்தனையோ பனுவல்கள் "ஓலைச்சுவடி"களில் இருந்து நவீன அச்சு இயந்திரம் ஏற முன்னரே "விவிலியம்"...
வயாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும் வாழிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்பலம் அவர்கள் மட்டுவிலில் காலமாகிவிட்டார். என்ற பெருந்துயரச்செய்தியை அறியத்தருகின்றோம். அன்னார் அமரர்களான ஆவரங்கால் வ.சி கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும் அமரர் க. தருமதுரை அவர்களின் சகோதரனும், காண்டீபன், தேவாஞ்சலி, பவளாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிற்சபேசன், மலரினி, துஷ்யந்தன், தர்சன், ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார், அன்னாரின் பிரிவுத் துயர் பகிர்வதோடு அன்னாருக்கு எமது ஆத்மாஞ்சலிகள்.  
காங்கேயனூர் 'கேதீஷ்வரன்' தொண்ணூறாம் ஆண்டில் 'மலரவன்' ஆகினன்! அஃதே, தெல்லியூர் 'கலாரூபி' தொண்ணூற்றியாறாம் ஆண்டில் 'பிரியவதானா' ஆகினள்! தாரளமாய் தன்னலம் கருதாது தமிழரினம் தளைத்தோங்கிட கண் துஞ்சாது உழைத்தனர்! மெய்வருத்தம் பாராது; அல்லும் பகலும் மகத்தான மருத்துவப்பணி புரிந்தனர்! இலட்சியத்தால் ஒருமித்தவர்கள் - பின்னாளில் கருத்தில் ஒருமித்த காதலரும் ஆகினர்! புதுக்குடியிருப்பூரில்இரண்டாயிரத்தியோராம் ஆண்டில் கைத்தலம் பற்றியே காணரும் மண இணையரும் ஆகினர்! தமிழூர்கள் எல்லாம் தங்கள் பொற்தடங்கள் பதித்தே கிரிவலம் வந்து இன்னுயிர்கள் பல காத்தனர்! எம்மவர் உயிரும் காத்தனர்! தமிழர்தம் உயர் விழுமியமாய் எதிரியின் உயிரும் காத்தனர்! உயிர் காத்திடும் அதியுன்னத தங்கள் பணியிலேயே...
சகோதர மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட அவன் "மதவாச்சி"யைச் சேர்ந்தவன்! தனது தாய் மொழியுடன் ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கதைக்கத் தெரிந்தவனாய் எனக்கு அறிமுகமானான்! கொச்சைத்தமிழ் பேசிய அவனுக்குப் பச்சைத்தமிழைப் பேச யானும் வேறு சில நண்பர்களும் கற்றுக் கொடுத்தோம்! அவனிடம் யான் பழகிய சிங்களம் குறைவாக இருந்தாலும் நிறைவான பண்பான தமிழை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்! கற்றுக் கொண்ட தமிழ் மூலம் பல நல்ல தமிழ்பேசும் நண்பர்களை அவன் சம்பாதித்துக் கொண்டான்! ஒரு நாள் அவன் வேர்க்க விறுவிறுக்க ஓர் ஒளிப்படத்துடன் என்னிடம் வந்தான்! யான் அதை வாங்கிப் பார்த்தேன்...! ஒளிகொண்ட அந்த...
"நல்ல நாள் என கருதி ஒரு நாளை தெரிவு செய்து அந்நாளில் தங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கல்வியில் சிறந்து விளங்குவர் என பெற்றோர் ஏடு தொடக்குகின்றனர். கல்வியில் அல்லது பதவிகளில் உயர் நிலையில் இருப்பவர்களை ஏடு தொடக்குவதற்காக அணுகுகின்றனர். ஒரு குழந்தையின் எதிர்காலம் ஏடு தொடக்கியவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. பெற்றோர்களே, பதவிகளில் இருப்பவர்கள் தற்போது தமது கடமைகளை புனிதமான முறையில் செய்வதில்லை. ஆகவே நீங்கள் அவர்களை நாடிச் செல்வதில் எது வித அர்த்தமும் இல்லை. ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் தாய் தகப்னை விட வேறொருவருக்கு அதிக அக்கறை இருக்க முடியாது. ஆகவே...
கட்டாய ஆட்சேர்ப்புக் குறித்து பல விதமான கருத்துக்களை வெளியிடும் பலருக்கு "கட்டாய வாசிப்பு"குறித்து தலைவர் விடுத்த உத்தரவு தெரிய வாய்ப்பில்லை. "வரலாறு எனது வழிகாட்டி"என உரைத்த தலைவர் தமிழினத்தின் வல்ல வரலாறுதனை தனது மக்களும் போராளிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என ஆழமாய் விரும்பினார். 1993 ஆம் ஆண்டளவில் தலைவர் தளபதிகளுடனும் முக்கிய பொறுப்பாளர்களுடனும் கதைக்கும் போது வரலாற்று நாவல்களை வாசியுங்கள் எனக் கண்டிப்பும்...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS