அமரர் நண்பன் மேந்தனுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்

84

அமரர் நண்பன் மேந்தனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

தர்மேந்திரா எனும் தனையனே நீ ஓர் தவப்புதல்வனென நாம் சிரம்தாழ்த்தி கரம்கூப்பி உனைவழியனுப்புமுன் சிலவரிகள் உன்பணிபற்றியதாய்….

மனிதருள் மாணிக்கம் என்றால் போல்
நீ மண்ணையும் மக்களையும் நேசிக்கமறக்கவில்லை .
பிறந்த அந்த ஊர்ப்பெயரைப்பேணவும் மறக்கவில்லை .
கற்ற அந்தக்
கல்லூரி மேம்பாட்டைப்பேணவும் பின்னிற்கவில்லை
இதற்கமைய ஓர் பழையமாணவர் பட்டறையை உன்வாழ்விடத்தில் நிர்மாணித்து நிலைபெறச்செய்த செம்மலாய் இன்று நீ எமைஎல்லாம் விட்டு விண்ணுலகம் சென்றாலும் மண்ணுலகம் உள்ளவரை மறுப்பதற்கோ மறப்பதற்கோ யாரும் இல்லை .
அப்பட்டறையின் விழுதாக நீ நின்று ஆற்றி நின்ற சேவையெல்லாம் இனிக் கிட்டாதோ என்று சொல்லி ஏங்குகின்றோம்
சென்றுவா நண்பனே !!
வயவர் நாம் எம்கண்ணீர்மழையால் நீ பயணிக்கும் பாதைதனை தூய்மை செய்து பூமாலை சூடி பாமாலைதனை பரிசாக்கி விடைகொடுக்கும் வேளை…..
மீண்டும் ஓரு முறைபிறப்பெடுப்பாய் எனவேண்டிநிற்கும்

வயவை மாணவ நண்பர்கள்