வயவன் இணையத்தின் நிறுவுனர் மேந்தன் இறையடி அடைந்தார்

எந்தன் அருமை நண்பன்
மேந்தன் எனை “எழுது எழுது ” எனச் சொன்னான்!

எம்மோடு பாடசாலையில் படித்துவிட்டுப் பின்னர் சன்னங்கள் நடுவே சன்னதம் கொண்டாடி விழி மூடித்தூங்கும் உன்னதங்களைப் பற்றியே எழுதச் சொன்னான்!

குப்பிளான் பார்த்தீபன், வயவையூர்
நிமலன்,பலாலி பிரபா, அச்செழு
கோபாலக்கிருஷ்ணன் என அந்தப் பட்டியல் நீண்டது!….

நன் மாந்தனான மேந்தன் “வயவன்இணையம்” தனை நிறுவி அதனூடக எனை ஆற்றுப்படுத்தினான்!

அஃதே,

இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மாபெரும் மானுடப் பேரவலமாகிய முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து வந்த எந்தன் வலியைப் போக்கிட முயன்றான்!

ஆனால்,

இன்று மேந்தனின் இழப்பின் வலியை ஆற்றுப்படுத்த முடியாமல் தோற்றுப்போகின்றேன்!

 

-வயவையூர் அறத்தலைவன்-