ஊன் வெந்தாலும் உறங்காத வலி – மே 18

கண்ணீரிலும் செந்நீரிலும்
கரைந்த காலங்கள் – பல
கடுகதியாய்க் கடந்தாலும்…

கஜவாகு மைந்தர்களின் தீராத
கயமை கண்டு துவண்டு
கண்டங்கள் – பல
கடந்து வாழ்ந்தாலும்…

காலதேவன் எனை அழைக்கும் காலம் கண்ணேதிரே தெரிந்தாலும்…

கடந்திட முடியாத
கனதியான வலி! 🥲