விண் வந்து மெல்ல உலவுகிறாள்
வெண் நிலவுப் பெண்! 🌝
வெண் மணலில் வரிச்சித்திரம்
வரைந்து மகிழ்கிறது நண்டு! 🦀
வரிச்சித்திரம் காண ஆசையுடன் ஓசை நயம் கூட்டி ஓடோடி வருகிறது
வெள்ளலை! 🌊
மண்ணிலே நெடுங்காலூன்றி விண்ணிலே
பசியநிற சிறகை விரிக்கிறாள் தென்னம்பிள்ளையாள்! 🌴
‘நண்பா’ எனக்கு ‘வெண்பா’ எழுதலையா?
என கண் சிமிட்டிச் சிரிக்கின்றன பெண்பூக்கள்! 🌺
ஆம், அத்தனையும்…
கவிஞர்களை கருத்தரிப்போம் – என
கங்கணம் கட்டி நிற்கிறதே!