கார்த்திகைத் திங்களில் செங்காந்தள்
☀☀☀☀☀☀☀☀ ☀☀☀☀☀
செங்களம் ஆடி வீழ்ந்த – எம்
செந்தமிழ் வீரர் நினைவுகள் பவனிவர
செங்கம்பளம் விரிக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
செம்மொழியாம் எம்மொழியாலும்
செப்பிட முடியா பரம்பொருளை
செவ்விதின் உரைக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
(செவ்விதின் -செம்மையாக)