தகப்பன் சாமி.. – நீங்கா நினைவலைகள்..

161

தந்தையின் அடையாளங்கள்
உன்னிடம் இருந்ததில்லை..
எந்தத் தந்தையும்
உனக்கு இணையாயில்லை..

தப்பி நாம் பிழைக்கையில் – நீ
தண்டனைகள் தந்ததில்லை
நம்பி நீ பிழைக்கையிலும் – நாம்
கண்டனங்கள் கண்டதில்லை..

நாமுண்டு முடிக்கும் வரை
நீ பசியாய்க் கிடந்ததில்லை
நீ உண்டு முடிக்க முன்னே
நம் வயிறு நிறைந்திடுமே…!

கொடும் புயலாய் நாமானால்
தொடு மலராய் நீயானாய்..
கொடு மலராய் நாமானால் – நா
தொடும் தேனாய் நீயானாய்..

மந்திரங்கள் சொன்னதில்லை
தந்திரங்கள் தந்ததில்லை
அந்தரத்தில் நின்றப் போதும்
எம் திறனாய் ஆனதில்லை.

நீ..
நீயாக நின்றாய்..
நாம்
நாமாகி வென்றாய்..

அதனால்..

தந்தையின் அடையாளம்
உன்னிடம் இருந்ததில்லை..
எந்தத் தந்தையும்
உணக்கு இணையாயில்லை.