நாளொரு குறள் 12

155

நாள் : 12
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 2

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பார் – உண்பவர்கள்

உண்பவர்களுக்கு உணவை உண்டாக்க உதவி, உண்பவர்கள் அதை உண்ணவும் உதவும் நீராகவும் மழை பெய்கிறது.
நீர் உயிர்களை உருவாக்கியது, நீர் உயிர்கள் வாழ உணவை உண்டாக்குகிறது. உணவை உண்ணவும் செரிமானம் செய்யவும் உதவுகிறது.

அது சரி நீர் என்றால் மழை நீர் மட்டுமா என்றுதானே யோசிக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் பொறுங்கள். அதை அடுத்ததாகச் சொல்வார் வள்ளுவர்.