வயாவிளானைச் சேர்ந்த ஆசீர்வாதம் மரியம்மா அவர்கள் காலமானார்.

194

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் மரியம்மா அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இல்லாரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மேரி தவமலர், தேவராசா, ரீற்றம்மா, புஸ்பராணி, அன்ரன் சௌந்தரராஜா மற்றும் மேரி செல்வராணி (இலங்கை), சற்குணராஜா, மேர்சி லூர்த்துமேரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கின்சன், ஜெஸ்டீனா, அமலராஜா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அருளப்பு அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

பௌஸ்ரன் றென்சி, பியறின் பவுஸ்ரினா, கெஸ்ரன் ஜிப்ரோய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம்.