போதி மரங்கள்!

‘குளிர்’வந்து தழுவுவதால்,

‘தளிர்’ விட்ட மரங்களும்

‘துளிர்’ விட்ட செடிகளும்-இனி

‘வெளிர்’மஞ்சளாகி -ஈற்றில்,

வெளிச்சோடிப் போய்

வெறுமை உரைக்குமே எங்கள்

“போதிமரங்கள்”!