மானம்பிராய்ப் பிள்ளையார் ஆலய வழிபாட்டுக்கான அழைப்பு.

308

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24/02/2019) எமது பிள்ளையார் ஆலயம் செல்ல அனுமதி கிடைத்துள்ளது. எனவே அன்றைய நாள் வயவை மக்கள் அனைவரையும் காலை 9 மணியளவில் யா/வயாவிளான்  மத்திய கல்லூரிக்கு முன்னால் ஒன்று கூடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள்.

பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட உள்ளதால், எங்கள் வயவை நிரந்தரமாக எமக்குக் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அதிகளவில் மக்கள் கூடினால், கோவிலையும் கோவிலை அண்டிய பகுதிகளையும் விடுவிக்க இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

எனவே அனைத்து வயவை மக்களும் 24/02/2019 அன்று காலை 9 மணிக்கு மத்திய கல்லூரி முன்றலில் தவறாது கூடி தம் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.