சீனதேசத்தின் வெறுங்கால் வைத்தியர்களும் தமிழர்தேசத்தின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையும்!

Barefoot Doctors of China and Thileepan Memorial Hospitals of Our Homeland

மானுடத்தின் வேதனைகளை வெல்வதைவிட உயர்ந்த மானுட இலட்சியம் வேறு ஏதும் இருக்கமுடியாது.

மருத்துவ சேவைகளை இலகுவில் எடுத்துச் செல்லமுடியாத மிகவும் பின் தங்கியகிராமங்கள்,மலைப்பிரதேசங்ள் போன்ற இடங்களில் அடிப்படைச் சுகாதார சேவைகளைத் தரமுயர்த்தும் நோக்கில் சீனமக்கள் குடியரசு வினைத்திறன் மிக்கதோர் சேவையை அமுல்படுத்தியது.

1960களில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தவர் சீன தேசத்தின் சிற்பி என வருணிக்கப்படும் மா ஓ சேதுங் ஆவார்.

“Barefoot Doctors” என அழைக்கப்படும் அவர்களின் அதியுன்னத சேவையால் சீனதேசத்தில் ஓர் புரட்சிகரத்திருப்புமுனையை ஏற்பட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது.

குக்கிராமங்களில் இருந்த விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு Paramedical Training வழங்கப்பட்டு பின் தங்கிய கிராம மக்களின் அடிப்படை மருத்துவ சேவைகள் அல்லது முன் வைத்தியசாலை பராமரிப்புகள் சரிவர வழங்கப்பட்டன.

அவர்கள் ஒரு தோளில்/முதுகில் மருத்துவப் பையுடனும் மறுதோளில் மண்வெட்டியுடனும் கிராமப்புற மக்கள் மத்தியில் திருவுலா வந்தனர்.

பாதணி கூட இல்லாமல் வெறுங்கால்களுடன் சறுக்கு மலைகளில் சலிக்காமல் ஏறி சீனதேசத்தின் “வெறுங்கால் வைத்தியர்கள்”உன்னத பணி செய்தனர்.

அத்தகைய பாணியில் அதையும்விட பன்மடங்கு அதிகரித்த மருத்துவக்கல்வி போராளிகளுக்குப் புகட்டி கிராமப்புறங்களின் அடிப்படைச் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காகவே தியாக தீபம் மருத்துவமனைகள்உருவாக்கப்பட்டன.

களமுனைகளில் பல காலம் உயிர்காத்த அனுபவம் மிக்க மூத்தமருத்துவப் போராளிகளும் தமிழர் சேனையின் இராணுவ வைத்தியசாலைகளில் தாதியாக சேவை புரிந்தவர்களுமே தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகாகத் தேர்வு செய்யப்பட்டு உதவி மருத்துவர் கற்கை நெறி(Curriculum of Assistant Medical Practitioner) போதிக்கப்பட்டது.

போதனைகளை வழங்கியவர்களில் முக்கியமானவர்கள்

Dr.பத்மலோஜினி கரிகாலன்,

Dr கா.சுஜந்தன்,
Dr தா.சூரியகுமாரன்,

Dr சி.சிவபாலன்,

Dr வீ.சண்முகராஜா,
Dr த.பாஷ்கரன்(கலை),

Drசதானந்தன்,
Dr இ.கதிர்ச்செல்வன்…

ஆகியோர்கள்.

இந்த மருத்துவமனைகளில் கண் வளராது, மனம் தளராது, மது அருந்தாது,புகைப்பிடிக்காது தவம் இருந்த பலர் இறுதி சமரில் அரச வைத்தியசாலைகளில் தங்கள் சேவையைத் தொடர்ந்தார்கள்.

வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிலர் தியாகச் சாவடைந்தனர்.

அவர்களில் களமருத்துவர் செவ்வானம், களமருத்துவர் இறையொளி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

தமிழர் எங்களை அடக்கி ஒடுக்க சீனதேசம் துணை போன கசப்பான செயலையும் எங்களால் மறக்க முடியாது.

தொடரும்…

நன்றி