‘உதிர’ப் பூக்கள் – சிறுகவி வலி(ரி)

‘ஜெசுபிரானின் பாடுகளை’ப்
படித்துக் கலங்கினோம். – பின்

எங்கள் “பாடுகளை”யும்
பெரு நம்பிக்கையுடன்
சுமந்து களைத்தோம் – இன்று

“கடற்பாடுகளை”க்கூட
காக்க முடியாமல்
எம் “பாடுகள்” நீள்கின்றன.

கடப்’பாடுகளைமறந்த வாக்கு வேட்டையர்
பாடுகள்எல்லாமே ஹொந்தாய்!

குறிப்பு: கடலை அண்டி உள்ள தரையே கடற்பாடுகள் ஆகும்.

இவை தந்தை வழி முதுசமாக ஆண் வாரிசுகள் மூலம் சந்ததி சந்ததியாகக் கடத்தப்படும்.

அண்மையில் தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களால் தமிழர்களின் வாடிகள் பறிக்கப்பட்ட போது எழுந்த உள்ளக் கிளர்ச்சியில் கருக்கொண்ட வரி(லி)கள் இவை..