மதம் – மரபுக் கவிதை

அறிவும் உணர்வும் அளவாய்க் கலந்து
செறியும் சிறப்பே மனம்

மனம் என்பது என்ன? மனம் என்பது உணர்வுகளால் ஆனது. அதே சமயம் மனதிற்கு இன்னொரு பகுதியும் உண்டு. அதற்கு அறிவு என்று பெயர்.
உணர்வகளற்று வெறும் அறிவினால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜடங்களாக இருப்போம்.
அறிவற்று வெறும் உணர்வுகளால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜந்துகள் ஆகி இருப்போம். அறிவும் உணர்வும் சரியான விகிதத்தில் கலந்து இருப்பதே நல்ல மனமாகும்.