வெளித்தெரியும் வேர்கள்

160

இமைகளின் மீதமர்ந்து விட்ட கனவுகளுடன்
தூக்கத்தில் நடக்கிறேன்
பகலிலும்..

காற்றும் கடலும்
புணர்ந்து பிறந்த அலைக்குழந்தையின்
அழுகையும் எழுப்பவில்லை..

மழைத் தூரிகை
மண்ணில் வரைந்த காடுகளின்
கீதமும் கலைக்கவில்லை..

நிலக்காரிகையின்
மலைப் பருவமேடுகள் பெய்கின்ற
கந்தர்வமும் உசுப்பவில்லை..

இயற்கையும் கொதித்திருக்கும்..

அடைமழையென
வீசப்பட்ட சூரிய எரிகற்களில்
பற்றி எரிந்தன கனவுகள்..

அணைந்துதான் போயிற்று
ஆதவனின் கோபம்..

ஆகாயக் குடை திரண்டு வந்து
சாமரச் சுகம் தந்தது..

அப்போதுதான்..
என்கிருந்தோ வந்த மனத்துளி
வேரை நனைத்தது..

கட்பூக்கள் பூத்தன..