எல்லையே இல்லையே!

எல்லையே இல்லையே!
********** **********

கற்பனைக்கும்
காற்றுக்கும்
கடல்கள் தாண்டிப்
பறக்கும் பறவைகளுக்கும் வேலிகள் ஏது?

காற்றைவிடவும் ஏன் ஒளியைவிடவும்
என் கற்பனைக்கு வேகம் அதிகம்.🚀🛰

பறவைகளைவிடவும் இறக்கை கொள்ளும் என் கற்பனைக்கு திறன் அதிகம்.🦋🦋

கருவறை(கடவுளின்),மணவறை,கல்லறை என வாழ்வின் பாதை எங்கனும் எம்முடன் நீளநடக்கும் பூக்களைவிடவும் என் கற்பனைக்கு அழகு அதிகம்.🌺🌼

பூமிப் பந்தினைப் போத்திய
“வளி மண்டலம்”உள்ள வரையே காற்றும் பறவையும் சிறகு விரித்துச் சிரிக்கும்,…🦅🦅

காற்று மண்டலத்தையும் தாண்டிச் சிறகு விரித்துச் சிறக்கும் என் கற்பனைக்கு
எல்லையே இல்லையே! 🖌🖌