அப்பா மனசு

140

நீயாண்ணா எனும்
தங்கையின் பார்வை..

திருத்தவே முடியாதெனும்
அண்ணனின் தோரணை..

என்னடா..
இப்படிப் பண்ணிட்ட என்ற
அம்மாவின் வாஞ்சை..

எதுவுமே
எதுவும் செய்திடவில்லை
எப்போதும் போல..

அப்பா மட்டும்தான் மிச்சமெனும்
நினைப்புத்தான் மிஞ்சியது.

சட்டென்று ஒரு வலி
சுள்ளென்றது
காய்ந்த காயத்தில் முரட்டுச் சுவர் தேய்த்த மாதிரி..
எப்போதும்
திட்டியே பழக்கப்பட்ட அப்பா
எதுவும் பேசாமல் போன போது..