மழை

231

உள்ளே இருந்து
வெளியில் வெறித்தாள்
அவள்.

அவளைத்
தொட முடியாத சோகத்தில்
யன்னல் கண்ணாடியில் தலை மோதி
தற்கொலையானது
வெளியில் பெய்த மழை..