சிலுவை சுமந்த இனத்தின் நீதி நிலுவையிலேயே இன்றும் உள்ளது.

உப்பு வயல்கள்
கண்ணாடிப் பளிங்கு போன்ற
வெண் பூக்களை
பூக்கும் நெய்தல்
நிலமதில்,

ஒப்பாரியும்
ஓலமும்
ஓயாமல் கேட்டது!

ஓயாத அலைகளின் இரைச்சலை
ஒப்பாரியும்
ஓலமும் விஞ்சியே நின்றது!

இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கின்றதே!

ஆம்,

“சிலுவை”சுமந்த இனத்தின் நீதி – இன்னமும் இன்னமும்,

“நிலுவை”யிலேயே உள்ளது! 🔱