களமுனை மருத்துவர் “ஒளிஞாயிறு” தமிழ்நேசன்

தமிழீழத்தில் வழஙகப்பட்ட அதியுச்ச விருதுகளில் ஒளி ஞாயிறு விருதும் ஒன்றாகும்.

களமருத்துவர் தமிழ்நேசன்


கல்லை“கனிய வைக்கும் கனிவான
பேச்சுக்கு – நீ
சொந்தக்காரன்!

எல்லை” இல்லா தேசப்பற்றுக்கு – நீ சொந்தக்காரன்!

இல்லை” என்றும், ‘இயலாது’ என்றும் உரைக்காத திருவாயிற்கு – நீ சொந்தக்காரன்!

தொல்லை“அகற்றிட தொடராய் மருத்துவபணி செய்த பொற்கரங்களுக்கு – நீ
சொந்தக்காரன்!

வல்லை“தொடக்கம்
உல்லை” வரை களத்திடை நடந்த
கால்களுக்கு நீ சொந்தக்காரன்!

முல்லை“யில் வீழ்ந்தாலும் எங்கள் தமிழ்வானில் என்றும் நீ முழுநிலவே தோழா!😍