அளப்பரிய சேவை ஆற்றி மறைந்த மருத்துவர் அருள்/ஜதீந்திரா அவர்களுக்குப் புகழ்வணக்கம்!

எதையும் தாங்கும் இதயம் கொண்டவன்,
எண்ணற்ற திறமை கொண்டவன்.
எளிமையே உருவாய் நின்றவன்.
எமக்காக கடமை செய்தவன்!

தனக்கென வாழா தமிழ் மகன்.
தன் துயர் மறந்த
தழலவன்!

இலக்கிலே குறியாய் இருந்தவன்
இயற்கையை இரசித்தே வாழ்ந்தவன்!

உரிமைக்காய் உழைத்து உயர்ந்தவன்
உழைப்பிற்கு உதாரணமானவன்!

எமக்கெல்லாம் பெருமை சேர்த்தவன்
எதிரிக்கெம் இயலுமை காட்டியோன்!

கணக்கினை முடித்துக்கொண்டு
காலனுடன் சென்ற போதிலும்
பிணக்கினை தீர்க்க நாங்கள் பிரிவற்று பெரும்பணி தொடர்வோம்!……🗝

-வைத்திய கலாநிதி விக்கினேஷ்வரன் –