தோழர் டொமினிக் ஜீவா ஐயா காலமானார்.

நள்ளிரவுதனை
நல்லிரவு ஆக்கிட மல்லிகையாள்
மலர்வாள் எம் செம்மண்ணில்!

இலக்கியத்தின் துணை கொண்டு,

“இரவின் பிடி”களை

“இரவின் மடி”களாக்கியர்

தோழர் டொமினிக் ஜீவா எனும் நெடுந்தகை.

எழுத்தாணி எனும் ஏர்தனைப் பிடித்து உழுது மல்லிகை வளர்த்த ஈழவூர் இலக்கிய உழவன் விண்ணகம் சென்றுவிட்டார் எனும் சேதி எமை தாக்குகின்றது.🥲

வெண்மல்லிகை கொண்டு இலக்கியப்பந்தலிட்டுத் தமிழை அலங்கரித்த இலக்கிய வித்தகரே எந்தையுடன் சொர்க்கமதில் ஓய்வு
கொள்ளுங்கள்! 🙏