ஏகலைவன் புதல்வன் இவன்

 

பாறை பிளந்து பருவம் அறிந்து
பக்குவமாய்‬ பயிர் செய்த
‪பரம்பரையில் வந்தவன்
‪பார்த்து மகிழ்வது ஏர்முனையை!

ஏகனின் ஏகப் பிரதிநிதி
ஏர்தனை ஏந்திடும் உழவனேதான்
என்பதை அறிந்து கொண்ட
ஏகலைவன் குழந்தை இவன்!