கவிமகனின் பகிரப்படாத பக்கங்கள் – ஒரு கவிப்பார்வை

254

பார்வை :- வயவை லம்போ

என் கண்முன் நடந்து கொண்டிருப்பது போல இருக்கிறது.

ஒவ்வொரு பக்கங்களையும் கடந்து போகும் போது வலி மட்டும் தான் மிச்சமாகிறது.

இத்தனை துன்பங்களையும் தாங்கி இத்தனை ஆண்டுகாலம் போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் சென்ற அத்தனை மாவீரர்களையும் எண்ணும் வேளையில் விழிகள் நனைகிறது.

களமருத்துவர்களின் பங்களிப்பு காலத்தால் மறக்கமுடியாத சேவை.

என்னை ஒரு சில மாதமாக தூங்க விடாது துரத்திய பக்கம் இந்த பகிரப்படாத பக்கங்கள்.

ஒரமாய் இருத்தி மெளனங்களின் மத்தியிலும் என்னை அழ வைத்திருக்கிறது.

இது போன்ற படைப்புகள் எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நாம் யார் என்பதையும் , எமது கொள்கையின் விலை என்ன என்பதையும் விளக்கி எடுத்துச் செல்வது எங்களின் கடமை.

அதை இப்புத்தகம் தொடக்கி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கவிமகனுக்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் பணி ஓங்க வேண்டும் உண்மைகளை வெளிக்கொண்டு தரவேண்டும்.

எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.