கறுப்பு வெளிச்சம்!

இரவு இன்பமானால் ‘இரவின் மடி’
என்கிறோம்!

இரவு துன்பமானால் ‘இரவின் பிடி’

என்கிறோம்!

பஞ்ச காலத்துப்
பஞ்சு விளக்கே
ஏற்ற முடியாத ஒரு காலத்தில்

(01)பலாலிப் பக்கமும்
(02)ஆனைறவுப் பக்கமும்
(03) தள்ளாடிப் பக்கமும்
(04)தாண்டிக்குளப் பக்கமும்
(05) கொக்கிளாய்ப் பக்கமும்

அதிக வெளிச்சத்தில்
மிதந்து கொண்டிருக்கும்!

ஆனால் அந்த நேரத்தில்

தமிழர் மனங்களில் அவை இருண்ட பக்கங்கள்!🖌