பழம்பெருமை உரைக்க அவதாரம் எடுத்த புதுமைமிகு பதுமையே!

உயிர் மூச்சாகிய
உயர் வீச்சாகிய
எம் தமிழின் பெருமைமிகு சிட்டே!

உன்னத தியாகங்களால் செக்கச்
சிவந்த எம் மண்ணின்
வெண் நித்திலமே!

பழந்தமிழின் பெருமைதனைச் சொல்ல அவதாரம் எடுத்த புதுமைமிகு பதுமையே!

சீரிளமைத் தமிழால்
முழு நெஞ்சையும் தொடுபவளே!

சீரிளமைத் தமிழுக்கு
சீர் சேர்ப்பவளே!

இனிய இந்த நாள் போல்
எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள் உண்டெனவே உனக்கு உண்டு!🎊