மாதாவும் மாரியம்மனும் மனக் கோவில்களும்

மடுமாதாவையும் மாரியம்மனையும் தமிழர்கள் ஒரு போதும் வேறுபடுத்தியது கிடையாது!

ஏசுநாதரையும் ஏழுமலையானையும் தமிழர்கள் ஒருபோதும் வேறுபடுத்தியது கிடையாது!

மடு மாதவையும் உத்தரிய மாதாவையும் நினைத்தபடி காட்டுமாதாவைக் கைதொழும் தமிழர்களை “சைவம்” என்றும் “கத்தோலிக்கம்” “கிறிஷ்தவம்”என்றும் வேறுபடுத்த முடியாது.

மதங்கள் கடந்து மானுடத்தை நேசிக்கும் பக்குவத்தினை எனது பிள்ளைகளுக்கும் பிரெஞ்சு வாழ் தமிழர்கள் கற்றுத் தந்தனர்.

பேரினவாதத்தாலும் வல்லாதிக்கங்களாலும்
புதிதாய்த் திணிக்கப்படும் மதவெறியும் பிரதேசவாதமும் எம் மண்ணில் புதையட்டும்!

தமிழ் பேசும் யாமெலாம்
தமிழ்த்தாயின் சேய்களாக ஒன்றாவோம்!

எமது பிள்ளைகளை காட்டுமாதா தேவாலயத்துக்கு அழைத்துச் சென்ற அத்தானுக்கும் அண்ணைக்கும் நன்றி!🙏