குமார் பொன்னம்பலம் – “செயலே சிறந்த சொல்” என செயற்பட்ட, செயலூக்கம் தந்த பெருமகனார்.🖌

சுதந்திரத்தை தேடியதால், கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை தன் சொந்தப் பணத்தாலும் நிறைந்த சட்ட ஆளுமையாலும் விடுதலை செய்தவர். 🦅

விடுதலை செய்யப்பட்டவர்கள் ஶ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் போக்கிடம் தெரியாமல், தங்கிடம் தெரியால் தத்தளித்தனர்.

அதையும் பார்த்துக் குமுறியவர் கொழும்பில் இருந்த தன் தங்கவீட்டிலேயே தங்க வைத்து பத்திரமாக அன்பு நடமாடிய ஆனந்தக்கூடுகளுக்கு அனுப்பி வைத்தவர்.✅

அடிமைப்படுத்தப்பட்ட இனத்தை அறிவு மிகுதியால் அடகு வைத்தவர் நம்மில் பலர்.

அத்தகைய மெத்தப்படித்த மேதாவி அடிமைகள் மத்தியில் வித்தியாசமாகச் சிந்தித்தவர்.

தமிழினத்தின் கூனல் நிமிர்த்த தன்னாலான அரும்பணி செய்தவர்.

“செயலே சிறந்த சொல்” என செயற்பட்டவர். செயலூக்கமும் தந்த பெருமகனார்.🖌

எந்தையுடன் சொர்க்கத்தில் ஓய்வு கொள்ளுங்கள் ஐயா!👑