மங்காது மாவீரர் புகழ்.

 

படைதனை இழந்து,
முடிதனை இழந்து,
செங்கோலும் இழந்து
தமிழரெம் வாழ்வு நீண்டாலும்
மங்காது மாவீரர் புகழ்!

மயங்காது தமிழினம் பகைவனிடம்!

பகைவர் சூழ்ச்சிகள் தொடர்ந்தாலும்
மயங்காது தமிழினம் பகைவனிடம்!

மானமாவீரரே உமை
அகம்தனில் நினைந்து…
கரம்தனைக் கூப்பி…
சிரம்தனை தாழ்த்தி
செங்கொடியுடன்
ஓர் நன்னாளில்
நிமிரும் எம்மினம்! “👑