மடுமாதாவும் மாரியம்மனும் கார்த்திகையில் அதிகம் அதிகம் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர்.

“ எம் மதமும் சம்மதம்”

எனத் தமிழர் நாம் நுனி நாக்கால் பேசிக்          கொண்டாலும்,

கார்த்திகையில் தமிழர் நாமெல்லாம் ஒரே
மதம்தான்.

பாரெங்கும் பரந்துள்ள தமிழரெல்லாம்
இதயத்தால் ஒன்றுபட்டு வணங்குகின்றனர்
#மானமாவீரரை!🙏

மடுமாதாவும்
மாரியம்மனும்
கார்த்திகையில் அதிகம் அதிகம் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர்.

ஏசுநாதரும்
ஏழுமலையானும்
கார்த்திகையில் அதிகம் அதிகம் மானமாவீரர் பற்றியே பேசிக்கொள்கின்றனர்.

ஆலயத்துக்குரிய பாதைகள் மங்கலாகத் தெரிகின்றன.

தேவாலயத்துக்கும்  போகும் பாதைகளும்  மங்கலாகவே தெரிகின்றன.

பேராலயத்துக்கும் போகும் பாதைகளும் கூடவே மங்கலாகவே தெரிகின்றன.

பாதை நெடுக காந்தள் மலர
கார்த்திகை நாயகரின் ஞான ஒளியில் துயிலுமில்லப் பாதையில் தமிழரெல்லாம் புனிதப் பயணம் தொடங்கிவிட்டனர்.

🙇 WORSHIP OF TAMIL HEROES 🙇‍♀️