மாவீரச் செல்வங்களுக்கு இதையாவது கொடுப்போம்.

எங்கள் மனங்களில்,
எங்கள் வனங்களில்,

எங்கள் நந்தவனங்களில்,
எங்கள் வனாந்தரங்களில் – ஏன்

எங்கள் முகநூல்களில் கூட
காந்தள் மலரும் மாதமிது!

இனி பேதமேது பேதமேது?

கட்சி பேதமின்றி,
சாதி பேதமின்றி,
சமய பேதமின்றி,
பிரதேச பேதமின்றி,

தமிழ்த்தாயின் சேய்களாக ஒன்றாவோம்!
ஏற்றிடுவோம் நெய்விளக்கு காவல் தெய்வங்களுக்கு!

மானமாவீரரே!!
உங்கள் கல்லறை மீதேற்றும் விளக்கொளி கண்டு வரலாறுக் கொடும் பகை விலகட்டும்!

மீண்டும் எமைச் சூழ்ந்த சாதியம் எரிந்து கருகட்டும்!

மதவெறியும் பிரதேசவாதமும் மண்ணில் புதையட்டும்!

எதிரியவன் எம் தேசம் விட்டு விலக்கட்டும்!

– வயவையூர் அறத்தலைவன் –