நாளொரு குறள் – 03

94

நாள் : 3
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 3

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

இதயம் என்னும் மலரில் குடியேறினவனின் மாட்சிமை மிக்க வழிகளை சேர்பவர்கள் பூமியின் நெடுங்காலம் வாழ்வார்.

இறைவனை இதயத்தில் வை. அவன் சொன்னபடி நட. நீண்ட ஆயுளுடன் வாழ்வாய் என்றும் கொள்ளலாம்.

உனக்கு பிடித்தவரை உன் மனதில் வை. அவரை அடியொற்றி பின் தொடர் நீண்ட காலம் வாழ்வாய் எனக் காதலையும் சொல்லலாம்.

பூவில் இருக்கும் தேனை தொடர்ந்து அருந்துங்கள், நீண்ட காலம் வாழ்வீர்கள் என மருத்துவமாகவும் எழுதலாம்.

நீண்ட காலம் வாழ மனம் விரும்பும் காரியங்களை விரும்பிச் செய்யுங்கள் எனத் தத்துவமாகவும் எடுக்கலாம். பிடித்ததை மனதில் வையுங்கள்…!