UNTOLD STORIES OF TAMIL PEOPLE

UNTOLD STORIES OF TAMIL PEOPLE🖌

மாவீரர் திங்களாம் கார்த்திகையில்,…

மாவீரரின் #திருவுருவப்_படங்களுடன் நின்றுவிடாது அவர்களின்

#குரல்கள்,

#உரைகள்,

#கதைகள்,

#கையெழுத்துக்கள்,

#கையேடுகள் …

என்பனவும் பாதுகாக்கப்பட்டு எங்கள்
இளையவர்களுக்கு காண்பிக்கப்படல் வேண்டும்!

மேற்குறித்த இந்த விருப்பம் எனக்கு நீண்ட நாட்களாய் உண்டு.

அந்த வகையில் கடினமானதோர் வாழ்க்கையின் மத்தியிலும் மானமாவீரரின் கதைகளுடன் தியாகங்களுக்குத் தோள் கொடுத்த மக்களின் கதைகளையும் கார்த்திகையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிமகன்.

அலைக்கரங்களால் அடிகடி தாலட்டப்படும் மாங்கனித்தீவில் தமிழரெம் துயர்கள் #இமயமளவு.

ஆதாலால் பலரும் எழுதவோ கவிபாடவோ திகைத்துவிடுகின்றனர்.

கவிமகனும் திகைத்தாலும் தனைச் சுதாகரித்து ஆசுவாசப்படுத்தி இங்கே இச் சிறிய #கடுகளவு நூலில் தமிழர் துயரையும் தியாகங்களையும் நிமிர்வதனையும் இயன்றளவு
உரைத்து உள்ளார்.

திருமிகு கவிமகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! 🖌