அப்பா மாடு..

797

அப்பா மாடு!!!
============

மாடு நமக்கெல்லாம் அப்பா மாதிரி….

பசு நமக்கு பால் கொடுத்து அம்மாவா இருக்கு. அதே சமயம் மாடு???

வீட்டுக்கு உழைச்சு கொட்டுது..

விளைஞ்சதையெல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து சந்தைக்குக் கொண்டுபோய் பணமாக்க உதவுது..

அப்புறம் குடும்பத்தை பல இடங்களுக்கு அழைத்துச் செல்வது…

இதுமட்டுமில்லை…

ஜல்லிக் கட்டில் மாட்டை அப்பாவாகவும் அடக்க வருபவர்களை மகன்களாகவும் நினைச்சுப் பாருங்க புரியும்…

சாப்பாடு கூட…அப்பா மாதிரிதான் மாட்டுக்கும்

அரிசியை நாம சாப்பிட்டு விட்டு மாட்டுக்கு வைக்கோல் கொடுப்போம்,.

கடலையை நாம சாப்பிட்டு விட்டு பொட்டு புண்ணாக்கை மாட்டுக்கு கொடுப்போம்..

எண்ணையை நாம எடுத்துகிட்டு புண்ணாக்கை மாட்டுக்கு கொடுப்போம்…

அப்பாக்களும் அப்படித்தான், பீஸாவின் கிரஸ்ட், எலும்புகளுடன் ஒட்டிய கறி இப்படி குடும்பத்தினர் ஒதுக்கும் பகுதிகளை உண்டு சந்தோசமா குடும்பத்துக்கு உழைப்பவர்கள் அவர்கள்.

(நான் சொல்றது நல்ல அப்பாக்களைப் பற்றி)

அப்பனைச் பிச்சுப் பிச்சுத் திங்கிற மகன்களும் உண்டு…

செத்தாலும் மாட்டுத் தோல் அடிபட்டு சத்தம் எழுப்பிச் சந்தோஷம் கொடுக்கும்.. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து செத்தாலும் நன்மை தரும் அப்பா மாதிரி

பால் கொடுக்கும் பசுவுக்கு அன்பும் பாசமும் வசதிகளும் கிடைக்குது…

இவ்வளவு செய்யற மாட்டுக்கு ஒரு நாள் பொங்கல் வச்சி மரியாதை பண்ணினா போதுமா?

ஒரு தந்தையாய் குடும்பத்திற்கு உழைக்கும் மாட்டுக்கு என்னிக்காவது அப்பா ஸ்தானம் கொடுத்திருக்கமா???

அதை விடுங்க.. அப்பாவுக்காவது அவருக்கு உரிய ஸ்தானம் கிடைச்சிருக்கா என்ன?

அப்பாக்கள் மாடுகள். ஜல்லிக்கட்டில் ஜெயிக்கிற வரைக்கும் கொண்டாடப்படுவார்கள். தோற்றால் அடிமாடுதான்.

அப்படிப்பட்ட அப்பாக்களின் அருமை இருக்கும் போது தெரிவதில்லை.

தந்தையர் தினம் அன்னையர் தினம் போல கொண்டாடப்படுவதில்லை.

நல்ல தந்தையை புரிப்து கொள்ள, நல்ல தந்தையாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே புரியும்.

ஓயாது சுற்றிக் கொண்டிருக்கும் பூமியைப் போன்றவர் தந்தை.

அகழ்வாரையும், அகல்வாரையும் தாங்கும் பூமி-தந்தை.

இதயத்தை துளைத்து கனிமங்களையும் நீரையும் உறிஞ்சி எடுத்தாலும் தந்தையெனும் பூமி நிற்காமல் சுழற்கிறது.

நாம் என்ன மாசுபடுத்தினாலும் ஓயாமல் மறுசுழற்சி செய்கிறது தந்தையெனும் பூமி.

வெயிலடித்தால் மழைக்கும், மழையடித்தால் வெயிலுக்கும், இதமான தட்ப வெப்ப நிலை தேடுகின்ற நாம், உயிர்ப்பிற்காகவே இவ்வளவு மாற்றங்கள் என்பதை அறியாதவராய் நம்மைத் தாங்கும் பூமியை இகழ்கிறோம்

தன்னுடைய அத்தனையயும் தந்துவிடும் பூமியை காணும்பொழுது தந்தையைக் காணுகிறேன் நான்.

தன்னையே தந்ததால் தந்தை.

நல்ல அப்பாக்களை உணர நல்ல அப்பாவாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே முடியும்.

தந்தையர் தின வாழ்த்துகள்.