கடவுள் கண் மறைந்து போனார்

360

கடவுள்
கண் மறைந்து போனார்

அசைவற்றுப் போயின
மதங்கள்

இல்லாத கடவுளுக்கு
இனி எதற்கு மதம்
முழங்க துவங்கின
நாத்தீக மேடைகள்

சற்று முன்கிடைத்த தகவல்
விளம்பரங்கள் கீழே
ஓடவிட்டன சில
தொலைக்காட்சிகள்

சூடான செய்திகளாய்
நெற்றி விளித்தன செய்திதாள்கள்..

‘போலி சாமியார்களிடம்
போலிசார் விசாரனை’
‘நாத்தீர்கள் மீதும்
புலனாய்வு பார்வை’
தலைப்பு செய்திகளாய் தெறித்தன
செய்தி அலைவரிசைகளில்..

கடவுளை கடத்தினவர்கள்
கடுமையாய் தண்டிக்கப்படுவர்
அரசியல் அரங்கங்கள்
அறிக்கைகளால் அதிர்ந்தன..

சர்வ மதப் பிராத்தனை
சர்வமும் நடந்தது
கடவுளுக்கு எதுவுமாகிவிடக்
கூடாதென..

கருவறையின் பின்புரத்தே
கண்ணுறாதபடி கிடந்தது
ஒரு கடிதம்..

நான் அற்றவர்களில்
நான் இருக்கிறேன்
நான் அற்ற மனதிலும்
நான் இருக்கிறேன்
நான் அற்ற இடத்திலெலாம்
எனைத் தேடி
நான் அற்றவற்றை
நீவீர் செய்வது பொறுக்காமல்
நான் அற்றுப் போகிறேன்
யாரும் எனைத்தேட வேண்டாம்
கடவுள்..