மீண்டும் வயவையில் வாழ..

445

அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடைபட்டுள்ள வயவையூரை மக்கள் பாவனைக்கு விட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த மே மாதம் 9 ஆம் நாள் (09/05/2018) வயவையூரின் ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றான ஶ்ரீவேலுப்பிள்ளை வித்தியாசாலையை பழைய இடத்திலேயே இயங்க வைக்குப் பொருட்டு யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் பள்ளியின் அதிபரும் பள்ளிச் சமூகமும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் ஶ்ரீவேலுப்பிள்ளை வித்தியாசாலையின் முன்னாள் அதிபர் திரு. ஆனந்தராஜா கந்தையா அவர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாபெரும் பணியில் மனமுவந்து ஈடுபடும் இவர்களுக்கு வயவன் இணையம் தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.