தமிழர் “நிழல்” அரசு – சுகாதாரத்துறை

WHAT WE DID FOR THE 
WELL-BEING OF OUR PEOPLE?

மக்களை சுகாதார அறியுடையவராய் மாற்ற பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

மலேரியா தடைபகுதியின் பூச்சியியல் பிரிவு, தமீழீழ சுகாதாரசேவைகளின் பற்சிகிச்சைப்பிரிவு, தொற்று நோய்த்தடுப்பு பிரிவு களுக்கூடாக ஆயிரத்திற்கு மேற்பட்ட Exhibition களை வன்னியில் போர்ச்சூழலில் நடாத்தியிருந்தாலும் கிளிநொச்சி சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கூடாக நடாத்தப்பட்ட நான்கு Exhibition களும் பெரியளவில் நடாத்தப்பட்டன.

1999 ஆம் ஆண்டு அக்கராயன் மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட exhibition இணை சுமார் பத்தாயிரம் மக்கள் பார்வையிட்டனர்.

அக்கராயனிலும் வட்டக்கச்சியிலும் நடாத்தப்பட்ட Exhibition களில் தமீழீழ மருத்துவக்கல்லூரியினரும் பங்கு பற்றியிருந்ததால் குறிப்பாக உயர்தரவகுப்பு விஞ்ஞான மாணவர்கள் மிகுந்த பயனடைந்தனர்.

Exhibition களில் கலைநிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாய் நடாத்தினோம். 

”குறைந்த விலையில் சத்துள்ள உணவு தயாரிப்பு ” சத்துக்கள் பணவிரய விபரங்களுடன் உணவகத்தையும் வட்டக்கச்சியில் நடாத்தியிருந்தோம்.

மிதிவெடி, விபத்து பாதுகாப்பு, முதலுதவி, Nutrition , தாய் சேய் பராமரிப்பு ,தொற்று நோய் தடுப்பு என பல விடயங்கள் விலாவரியாக மக்களிடம் எடுத்துச்செல்லப்பட்டது.

கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவை யுடனும் Exhibition களை பாதுகாப்பு கேள்விக்குறியான பிரதேசங்களில் ( நெடுங்கேணி, தட்சணா மருதமடு, ———-) நடாத்தியிருந்தோம். 
 எமது வருமுன் பாதுகாப்புப்பணியில் exhibition களையும் ஒருவடிவமாக பயன்படுத்தினோம்.

1990 களின் பிற்பகுதியில் இலங்கையின் தொற்று நோய்கூடியபிரதேசமாய் (குறிப்பாக மலேரியா,Typhoid fever ) எமது பகுதி இருந்தது. 

2000 களின் ஆரம்ப காலங்களில் இலங்கையின் தொற்று நோய்குறைந்த பிரதேசமாய் எமது பகுதி மாறிற்று.🗝💯

தமிழீழ சுகாதார சேவையின் பணிப்பாளர் Dr சுஜந்தன் காசிலிங்கம் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றின் சிறு தொகுப்பு.

 

நன்றி

- வயவையூர் அறத்தலைவன் –