வயவன் மலர்வு

234

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவர் நெஞ்சிலும் இன்பம் பொங்கட்டும்.

இந்நன்னாளில் வயவன் இணையம் மலர்வதில் மகிழ்ச்சி.

இது நாம் படித்தவற்றையும் நம்மால் இயல்பவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இத்தளம்.

இது எந்த ஒரு அமைப்பினதும்/ஊரினதும் உத்தியோகபூர்வ தளம் இல்லை.

இது படைப்பாளிகளுக்கும் பயனாளிகளுக்குமான தளம்.

களம் கட்டுக் கோப்புடன் இருக்க வேண்டும் என்பதால் சில சுய கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

பதிவிட விரும்புவோர் தமது உண்மைத் தகவல்களை தளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சக மனிதனை நோகடிக்கும் பதிவுகளுக்கு இங்கே இடமில்லை.

ஒருவரை ஒருவர் மதித்துப் பழக வேண்டும்.

எவ்வித பேதங்களுக்கும் இடமில்லை. நாம் அனைவரும் சமத்துவம் பேண வேண்டும்.

பதிவுகள் அனைத்தும் “மட்டிறுத்தினர்”களால் செம்மை செய்யப்பட்ட பின்னரே பதியப்படும்.

தளப் பொறுப்பாளர் உள்ளிட்ட தளத்தில் “செயற்கட்டமைப்பு” காலப்போக்கில் அறிவிக்கப்படும்.

தளத்தில் உங்களைப் பதிவு செய்ய vayavans@gmail.com என்ற மின்ஞ்சலுக்கு தகவல் அனுப்பவும்.

குறுகிய காலத்தில் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பதில் அனுப்பப்படும்.

உங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் பயனர் பெயரும் தற்காலிக கடவுச்சொல்லும் அனுப்பி வைக்கப்படும்.

தளத்தில் உங்களை அறிமுகப்படுத்திய பிறகு பதிவிடும் வசதி உங்களுக்குக் கிடைக்கும்.

ஆரோக்கியமான கேள்விகளுக்கே என்னால் விடை அளிக்க முடியும். மற்றவர்களாலும் அப்படியே.. என்ற நிலைப்பாட்டுடன் ஒருங்கிணைந்தால் தேவை அற்ற கேள்விகள் எழ தேவை இராது.

நாம் பேச்சுக்குக் கொடுப்பது குறைந்தளவு முக்கியமே. செயலுக்கே எமது முக்கியத்துவம் என்ற மேதகு வே பிரபாகரன் அவர்களின் தொனிப்பொருளுடன் பயணிப்போம் வாருங்கள்.

நன்றி.