வலிகள்

105

பிடுங்கிய மாங்கனியில்
துளிர்த்தது கண்ணீர்.. அருகில்
பறிக்கப்பட்ட அவள்..

~~~~~~~~~~~~~~~~~~~~
பூக்கள் வாடி இருந்தன
பூக்களின் நடுவில்
பூக்களைப் பறிக்காதீரைப்
பார்த்தபடி சின்னவள்…!

~~~~~~~~~~~~~~~~~~~~~

பறவைகள் பலவால்
சல்லடையாகிக் கிடந்தது
மூங்கில் காடு..
கோகிலத்தின் மூச்சுக் காற்றில்
கோகுலம் ஆவதற்கு..!

~~~~~~~~~~~~~~~~~~~~

அபிஷேகப் பாலில்
உப்புச் சுவை
வெளியே காத்திருந்தது
பச்சிளம் குழந்தை..

~~~~~~~~~~~~~~~~~~~