தமிழில் ஒரு புதிர்

4752

தமிழில் ஒரு புதிர் …

நான்கெழுத்துச் சொல்லாம்
முதலெழுத்துப் போய்விட்டால் பெண்ணாகும்.
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு திங்கள்.
அவ்வெழுத்தோடி
விட்டால்
கடுங்காற்றாம்..

முதலும் ஈறும்
ஒன்றிணைந்தால்
மாட்டுணவு.
முதலிரண்டும்
ஒன்றானால்
மண்ணில் மூடல்.

அறிவில் தோண்டி
ஆய்ந்தறிவீர்.

விடை சொல்வீர்.

2 COMMENTS

Comments are closed.