பலாலியில் அமைக்கப்படுகின்ற ஆரம்பப்பள்ளிக்கு உதவி கோரப்பட்டுள்ளது

101

உறவுகளே!!!!!!

எமது உறவுகளின் எதிர்காலக் கல்வியினை கருத்திற் கொண்டு, பலாலிச் சமூக அமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்ற, ஆரம்பப் பள்ளியினை ஆரம்பிப்பதற்கான கட்டுமாணப் பணிகள் மிகவும் சிறப்பாக, துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்தப் பணிக்காக நிதியினை வழங்கி உதவிய எமது உறவுகளுக்கும் மற்றும் பல வழிகளிள் இக் கட்டுமாணப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கும் மீண்டும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். அத்துடன் மிக விரைவில் ஆரம்பப் பாடசாலை திறப்பு விழா நடை பெறும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இக்கட்டடத்தினை பூர்த்தி செய்வதற்கு மேலும் நிதி தேவைப்படுவதனாலும் உங்கள் உறவுகளின் பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டும் உங்களால் முடிந்தளவு நிதியினை வழங்கி எமது கிராமத்தின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பை நல்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளுகின்றனர் பலாலி சமூக அமைப்பின் நிர்வாகத்தினர்.