கிரிக்கெட் பாடங்கள் : தோனியின் நிர்வாகவியல் – 6

306

பாடம் 6

திட்டத் தெளிவு 

இந்தத் தொடரில் கவனித்துப் பார்த்தால் ஒரு வித்தியாசம் பளிச்செனப் புலப்படும். ஆஸ்திரேலியா ஒவ்வொரு நாளும் அனைத்து ஓவர்களையும் முடிக்கக் கஷ்டப் பட்டுக் கொண்டே இருக்க, இந்தியா அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இருக்கிறது. தோனி முயன்ற அதே மாதிரி வியூகத்தை 8-2, 7-3 எனச் சிறிது மாற்றம் செய்து பாண்டிங் உபயோகித்தாலும் தெளிவாய் சேவாக் எப்படி அடித்து விளையாடுவது என்று பாடம் எடுக்கிறார்.

6 விக்கெட்டுக்கள் விழுந்த நிலையிலும் ஹர்பஜனை ஓவர் ரேட் குறைவாக இருக்கிறது. எனவே கவனமாய் ஆடினால் ரன்கள் குவிக்கலாம் என பொறுப்பாய் ஆட வைக்க இயல்கிறது. இந்த சூழ்நிலையில் இதைத்தான் பாண்டிங் செய்வார் என்னும் யூகம் வியக்க வைக்கிறது.

உலகின் முதல்தர அணி எனக் கூறப்படும் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியின் யுக்திகளை அவற்றின் வெற்றிகளைக் கண்டு காப்பியடிக்க முயற்சிக்கிறது. அதாவது அதை யாரும் கீழிறக்கவில்லை. அவர்களை அறியாமல் அவர்களே தங்கள் இருக்கையிலிருந்து குப்புற விழுந்து கிடக்கிறார்கள்.

அடுத்த நாளைக்கான திட்டத்தையும் நேற்றே கோடி காட்டி இருக்கிறார். முதல் இரண்டு மணி நேரம் அப்படித்தான் மிகவும் வைடாகத்தான் வீசுவோம். ஜெயிக்கணும்னு ஆசை இருந்தால் ஆஃப் சைடிற்கு வேகமாய் நகர்ந்து லெக் சைடில் அடித்து ஆடட்டும் என்று சொல்லி இருக்கிறார்.
மூன்றாம் நாளின் போது ஆரம்பத்தில் வேகப் பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தினார். ஓவர் வேகத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஒரே நோக்கம் பந்து பழையதாக வேண்டும். அதன் பின் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தலாம். இன்றும் அவரது வியூகத்தில் ஒரு தெளிவான அணுகு முறையைக் காணலாம்.

அவருடைய தடுப்பு வியூகத்தையும் எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார் பாருங்கள். 

 (In the Mahabharat, there was a saying which said concentrate on the eye of the bird. Similarly, for us, the Border-Gavaskar trophy is the bird’s eye and we are concentrating only on winning it and not on what strategy we are using.)”

ஒரு சின்ன விஷயம் சொல்வேன். மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பறவையின் கண்ணைக் குறிவைப்பவனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிய வேண்டும். அதன் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டு. பார்டர் கவாஸ்கர் கோப்பைதான் அந்தப் பட்சியின் கண் நமக்கு. அதன் மீது மட்டும் தான் எங்கள் கவனம் இருக்கிறது. அது எந்த வகையில் வெல்லப் படவேண்டும், அதற்கான யுக்தி முறைகள் என்னென்ன என்பதைப் பற்றி அதிகம் நாம் அதிகம் கவலைப் படக் கூடாது.

வெற்றிக்காக பல வியூகங்கங்கள் யுக்திகள் சேய்யப் படுகின்றன். அவற்றில் சில அனைவராலும் போற்றப்படலாம். சில போட்டித் தலைவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எனக்கு முக்கியமானது அணி ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதே. ஆகவே மற்றவரின் குறைகூறல்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை. இன்று நாங்கள் வெற்று பெறுகின்ற வலுவான நிலையில் இருப்பதற்குக் காரணம் அந்த வியூகம். எனவே அதில் எந்தத் தவறும் இல்லை.

ஐபிஎல் அணியின் தலைவராக இருந்தபொழுது முதல் நான்கு போட்டிகளில் வெற்றி அடுத்த நான்கு போட்டிகளில் தோல்வி. 

இந்த நிலையில் இவரது திறமையில் யாரும் சந்தேகப் படவில்லை. தோல்விகளை வரிசையாகச் சந்தித்த பெங்களூர் ஹைதராபாத் மும்பை அணிகள் மனம் தளர்ந்தன. ஆனால் சென்னை அணி எப்பொழுதுமே குறை சொல்லப்படவில்லை. இறுதிப் போட்டியின் பாலாஜியின் இறுதி ஓவர் வரை.

தோற்றாலும் அணியில் திறமை இருக்கிறது. இந்நிலை கூடிய விரைவில் மாறும் என்பதை மனங்களில் பதிய வைப்பது என்பது ஒரு தலைவனின் மிக முக்கியப் பண்பு. அணியின் மனம் சோர்வடையாமல் முன்னேற்றத்தை மட்டுமே நோக்கு நகர்வது அந்தப் போட்டிகளில் கண்கூடாய் காணக் கிடைக்கும்.

அணியின் பந்து வீச்சைப் பார்ங்கள். மக்கையா நித்னி வரும் வரை சிறந்த – அறிந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லை. மன்பிரீத் கோனி – ஜேக்கப் ஓரம் பழனி அமர்னாத் – ஜோகீந்தர் சர்மா முத்தையா முரளிதரன் – பாலாஜி.. பல்லில்லாப் பாம்பு என நினைக்க வேண்டிய இந்த கூட்டம் (முரளிதரனைத் தவிர) எப்படி ஜெயித்தது?

திட்டத் தெளிவு முக்கிய காரணம். திடீரென ஏற்பட்ட ஞானோதயம் தெளிவு என்றுச் சொல்லும் படி வெற்றி ஆகாயத்தில் இருந்து திடீரெனக் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரவில்லை. தன் கையின் பலம் பலவீனம் அறிந்து பலத்தை முறையாகப் பயன்படுத்தி பலவீனத்தை வெளிக்காட்டாமல் விளையாடுவது. 

குருட்டாம் போக்கில் ஒரு யுக்தியை முயலாமல் திட்டமிட்ட கணக்குகளுடன் யுக்தியை அணுகுவது 

இதற்கும் மேல் இன்னொரு மேலாண்மைத் துறையில் தோனி மின்னுகிறார். அதற்குப் பெயர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட். அதை அடுத்து பார்ப்போம்.