நாளொரு திருக்குறள்

345

நாள் :5
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

போற்றுவார் போற்றலும் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!! – கண்ணதாசன்

எல்லா புகழும் இறைவனுக்கே – ஏ ஆர் ரகுமான்

வினை செயவதால் கர்மபலன் கிடைக்கிறது. அது நல்வினையாக இருந்தால் நற்கருமம் என்றும் தீவினையாக இருந்தால் தீங்கருமம் ஆகியவை கிட்டுகின்றன. நற்கருமம் நற்பலனைக் கொடுத்து உயர்த்துகிறது. தீகருமம் இன்னலுக்கு ஆளாக்குகிறது. ஆனால் கருமபலன்கள் இருக்கும் வரை பிறவிப் பிணி தீராது. எனவே கருமங்களைச் செய்யுங்கள். ஆனால் பலனை விரும்பாதீர்கள். கர்ம பலனை பரமாத்மாவுக்கு அர்ப்பணித்து விடுங்கள். இதுவே பிறவிப் பிணி அறுக்கும் கர்ம யோகம் – கண்ணனின் பகவத்கீதை.

இதையே இங்கு வள்ளுவர் சொல்கிறார்… அர்த்தமுள்ள காரியங்களைச் செய்து அதன் புகழை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிற மக்களிடம் இருளைச் சேர்க்கின்ற நல்வினை தீவினை என்ற இரு வினைகளும் சேராது.