வயாவிளான் மக்களின் மீளெழுச்சிக்காக புலம் பெயர்ந்து வாழும் வயாவிளானார் பலரும் பல்வேறு விதத்தில் உதவி வருகின்றார்கள். அந்த வகையில் ஜேர்மனியில் வசிக்கும் வயாவிளானார், வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மன் ஊடாக உரூபாய் 111801 ஐ மீளெழுச்சிக்கான உதவும் கரங்களிடம் கையளித்துள்ளனர். இத்தகவலை உதவும் கரங்களின் உத்தியோகபூர்வ தளம் செய்தியாக வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

1,11,801 ரூபாய் உதவி வழங்கல்

வயாவிளானின் மீளெழுச்சி எனும் மாபெரும் பணியில் பங்கெடுத்த ஜேர்மன் வாழ் வயாவிளானாருக்கும், ஒருங்கிணைத்த அமைப்புகளுக்கும் வயவன் இணையத்தின் நன்றி கலந்த பாராட்டு வணக்கங்கள்