வயாவிளானைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இலண்டனில் வசித்து வருபவருமான செல்வி.த.எழிலினி அவர்கள் A* பெற்று அதி உயர் தேர்ச்சி அடைந்துள்ளார். பன்முகத்திறமை கொண்ட இவர் கவிதை வடிப்பதிலும் தேர்ந்தவராக உள்ளார்.

கண்டேன் கண்டேன்

நி(இ)றைவனின் நிறைவான

கைவண்ணம் கண்டேன்!

கண்டேன் கண்டேன்

உ(இ)றைவனின் உயிர்கொண்ட

உயிரோவியம் கண்டேன்!

கண்டேன் கண்டேன்

கலைக்கூடம் கண்டேன்!

கண்டேன் கண்டேன்

அன்பு நடமாடும்

அழகிய கலைக்கூடம் கண்டேன்!

கொண்டேன் கொண்டேன்

 பேரன்பு கொண்டேன்!

எழிலினி தர்ஷன்

வளர்நிலை 11

தனிநாயகம் தமிழ்ப்பள்ளி

வேற்று மொழிச்சூழலில் வசித்தாலும் தாய்மொழியாம் தமிழ் மொழியில் கவிதை வடிக்கும் அளவுக்கு புலமைப் பெற்றிருக்கும் இவர், இலண்டனில் நடைபெற்ற தேர்வில் அதிஉயர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் மென்மேலும் பல சாதனைகள் புரிந்து, இவரால் வயவை மண் பெருமிதம் கொள்ள வயவன் இணையம் வாழ்த்துகிறது.