நாளொரு திருக்குறள் – 02

260

 

பால் – அறத்துப் பால்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 2

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்.

கற்பதினால் உண்டாகும் பயன் என்ன?
உண்மையான மெய்யறிவு கொண்டவனின் நன்மைத் தரும் கால்களை பணியாவிடின் ஒன்றுமில்லை.

கல்வி அறிவினைத் தரும்.
அறிவு மெய்யறிவை உணரவைக்கும்.
மெய்யறிவை உணர்தல் பணிவினை வளர்க்கும்.
அதுவே கற்பதின் பயனாகும்.

கற்பது என்பது உணர்ச்சிகளை திருப்தி கொள்ளவைக்க அல்ல. அறிவை வளர்த்து உண்மையை உணர்வதற்கே.

முழு திருக்குறளும் படிக்க